Wednesday, January 13, 2010


நடிகரான ஆஸ்கர் நாயகன்

ஒரு இசை விழாவுக்காக போக்குவரத்து நெரிசல் ஏற்படும், எனவே காரில் யாரும் வரவேண்டாம் என்று கூறியிருக்கிறது சிட்னி நகர காவல்துறை.

அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறவர் வேறுயாருமல்ல நம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்தான். இந்த இசை நிகழ்ச்சியைக்கான கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் டிக்கெட் விற்றிருக்கிறதாம்.

மேலும் ஆஸ்திரேலியப் பாடகர் மார்ட்டன் என்பவர் இயக்கும் இசை பற்றி டாக்குமெண்ட்ரி படத்தில் ஏ.ஆர். ரஹ்மானும் நடிக்க இருக்கிறார். பெரும்பாலும் எந்தப் படத்திலும் நடிக்க ஆர்வம் காட்டாதவர்.

ஆனால் இசை சம்பந்தப்பட்ட படம் என்பதாலும், மார்ட்டன் நல்ல நண்பர் என்பதாலும் ஒப்புக்கொண்டேன் என்கிறார் ஆஸ்கர் நாயகன்.

இதனால் இங்குள்ள தமிழ் இயக்குனர்களும் ஏதாவது ஒரு காட்சியில் நடிக்கவைக்க கேட்கலாமா என யோசித்து வருகின்றனர்.


0 comments:

Post a Comment