
தொழிலதிபர் அஸ்வின் குமார்& ரஜினி மகள் சவுந்தர்யா நிச்சயதார்த¢தம் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்க உள்ளது.
இதுபற்றி சவுந்தர்யா கூறியதாவது:
கடந்த ஓராண்டாக அஸ்வினை எனக்கு தெரியும். எனது பெற்றோரும் அஸ்வினின் பெற்றோரும் குடும்ப நண்பர்கள். எனது காதலை பற்றி சொன்னதும் அப்பா சம்மதம் தெரிவ¤த்தார். அதனால் இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் எனலாம். அஸ்வினை தேர்ந்தெடுத்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன். நான் சினிமாவில் இருப்பதால் இதே துறையை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கும் விருப்பம் எப்போதும் இருந்ததில்லை. அதே நேரம், எனது பணியை அஸ்வின் மதிக்கிறார். திருமணத்துக்கு பின் நாங்கள் சென்னையில்தான் இருக்கப்போகிறோம்.
அவரது பிசினஸும் இங்கேதான். எனது பட நிறுவன வேலைகளும் இங்கேதான். அதனால் வேறு எங்கே போவது? நிச்சயதார்த்தம் பிப்ரவரி 17&ம் தேதி நடக்கிறது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த ஆண்டில்தான் திருமணம் இருக்கும். இப்போதைக¢கு ‘கோவா’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் பிசியாக இருக்கிறேன். இப்படம் இம்மாத இறுதியில் ரிலீசாகும். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.
0 comments:
Post a Comment