
நயன்தாரா “பாஸ் (எ) பாஸ்கரன்” என்ற படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படிப்பிடிப்பு 25 நாட்களாக கும்பகோணத்தில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இயக்குனர் ராஜேஷ் சென்னைக்கு மாற்றியுள்ளார். பொங்கல் முடிந்ததும் 18-ந் தேதியில் இருந்து ஒருவாரம் இங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக நயன்தாரா சென்னை வந்து தங்க இருக்கிறார்.
படப்பிடிப்பின் போது நயன்தாராவை பிரபுதேவா மனைவி ரம்லத் தாக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபுதேவா- நயன்தாரா காதலை ரம்லத் கடுமையாக எதிர்த்து வருகிறார். இருவரும் ஐதராபாத், திருவனந்தபுரம் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக தங்குவது பற்றி அவ்வப்போது ரம்லத்துக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கணவரை விட்டு விடும்படி செல்போனில் காரசாரமாக திட்டினார். எஸ்.எம்.எஸ்.கள் தொடர்ந்து அனுப்பியும் எச்சரித்து வருகிறார்.
ஆனால் நயன்தாரா எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தியுள்ளார். ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த படவிழாவுக்கு இருவரும் ஜோடியாக வந்து அருகருகே உட்கார்ந்து இருந்தனர். வெளிநாடுகளிலும் ஒன்றாக ஷாப்பிங் போகிறார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ரம்லத் ஆத்திரமாகியுள்ளார். நயன்தாராவை பார்த்தால் அடிப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த மிரட்டலுக்கு பின் நயன்தாரா சென்னை வருவதை குறைத்து கொண்டார். வந்தாலும் ஒருநாள் மட்டுமே தங்கினார். அவர் தங்கும் இடம் திரையுலகினர் யாருக்கும் தெரியப்படுத்தப்படுவது இல்லை.
இந்த நிலையில் “பாஸ் (எ) பாஸ்கரன்” படப்பிடிப்புக்காக கூடுதல் நாட்கள் சென்னையில் தங்க இருக்கிறார். நயன்தாராவிடம் கேரளாவில் உள்ள வீட்டுக்கே சென்று சண்டை போட ரம்லத் திட்டம் போட்டார். அவருக்கு நெருக்கமானவர்கள் தடுத்து விட்டனர். இப்போது சென்னைக்கு நயன்தாரா வருவது வசதியாகிவிட்டது. படப்பிடிப்பில் அத்துமீறி நுழைந்து நயன்தாராவை அடிக்க வியூகம் வகுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நயன்தாராவுக்கு தனியார் செக்யூரிட்டிகளை கொண்டு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சிம்புவுடன் மோதிய போது தனுசுடன் நடித்த “யாரடி நீ மோகினி” படப்பிடிப்பு சென்னை ஸ்டூடியோவில் நடந்தது. அப்போது பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு தளத்துக்குள் வெளியாள் யாரையும் அனுமதிக்கவில்லை. வாசலில் ஆஜானு பாகுவான் அடியாட்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். அதுபோல் இந்த படத்தின் படப்பிடிப்பையும் பாதுகாப்போடு நடத்த உள்ளனர்.
0 comments:
Post a Comment