
விஷாலையும் என்னையும் இணைத்து செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி காதல் எதுவும் இல்லை. அது வெறும் கிசுகிசுதான்.
எனக்கு திருமணம் எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும். எனக்கு பொருத்த மானவரை இன்னும் சந்திக்கவில்லை என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் சிறப்பாக நடித்து இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன. மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் நடிகர்களில் விஜய்யை பிடிக்கும். அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.
“ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பார்த்திபனுடன் காதல் செய்யும் காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தேன். பரதநாட்டியம் ஆடியது கஷ்டமாக இருந்தது.
சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தது இனிய அனுபவம். ஆனால் அதில் சைக்கோ ரக பெண்ணாக வந்தது பிடிக்கவில்லை. அப்படி நடித்தது நான் செய்த பெரிய தவறு.
0 comments:
Post a Comment